பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

நாட்டின் சமகால பொருளாதார நிலைமை மற்றும் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாகவே அவர் இந்த உரையின்போது விசேடமாக கருத்து வெளியிடவுள்ளார்.

பிரதமரின் உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதமும் நாளை மாலை வரை நடைபெறவுள்ளது.

மேலும், நாளை கூடவுள்ள பாராளுமன்றில் 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணையையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய அரச சேவைகளைத் தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த குறைநிரப்பு மதிப்பீடு பிரேரணையை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த பிரேரணை மீதான விவாதம் புதன்கிழமை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் 2022.04.09 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கமைய ஒழுங்குவிதி மற்றும் கடன் எல்லையை ஒரு ரில்லியன் ரூபாவினால் அதிகரிப்பதற்கு உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச்சட்டத்தின் கீழான தீர்மானமும் நாளைய அமர்வில் விவாதமின்றிய நிலையில் நிறைவேற்றப்படவுள்ளன.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி