கொழும்பு பிலவர் டெரஸ் வீதி பகுதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை சற்றுமுன் பதிவாகியுள்ளது.

அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நோடீல் கிராமத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டுள்ளனர்.

எனினும் அப்பகுதியில் பரீட்சை நிலையமொன்று இயங்கி வரும் நிலையில் அப்பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களை அனுப்ப முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

எனினும் தற்போது போராட்டக்காரர்கள் வீதியை மறித்து அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி