இனவெறி மற்றும் மதவெறியை விதைக்க ராஜபக்சே அரசு பயன்படுத்தும் சிங்கக் கொடியின் கீழ் வடக்கில் உள்ள தமிழர்கள் ஒன்றிணைந்து போராடுவது கடினம் என அரசியல்வாதி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கக் கொடியை நாங்கள் வெறுக்கவில்லை ஆனால் அது பயன்படுத்தப்படும் விதம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இனவாதத்தையும் மதவெறியையும் பரப்புவதற்கு அரசாங்கம் இந்த சிங்கக்கொடியை பயன்படுத்துகிறது” என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் குகதாஸ் தெரிவித்துள்ளார். 

மன்னாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜபக்சே அரசுக்கு எதிராக தெற்கில் சிங்கக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தும் போராட்டக்காரர்களுடன் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் இணைந்து போராட முடியாது.''சிங்கக் கொடி நமக்கு ஆக்ரோஷமான கொடியாகத் தெரிகிறது. 

நாட்டில் வாழும் அனைவருக்கும் பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்’’ என்றார்.இந்த நாட்டில் வாழும் தமிழர்களை சமமாக நடத்துவதற்கு இதுவரை ஆட்சி செய்த எந்த சிங்கள தலைவர்களும் முன்வரவில்லை என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் குகதாஸ் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்கள் எவ்வளவோ கோரிக்கை விடுத்தாலும் இந்த ஆட்சியாளர்கள் சம உரிமையை வழங்க மாட்டார்கள். சிங்கள மக்களுடன் இணைந்து போராடுவதற்கு முதலில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். 

அரசியலமைப்பின் மூலம் சம உரிமைகள் உறுதி செய்யப்படும் வரை இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி