1200 x 80 DMirror

 
 


“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் அல்லது முழுமையாக மாற்றப்பட வேண்டும்" என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தப்பவிட்டு அப்பாவிகளையே ஆட்சியாளர்கள் சிறையில் அடைத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு வலியுத்தி மக்களிடம் மனுவில் கையெழுத்துப் பெறும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதில் கையெழுத்திட்டுள்ள கொழும்பு பேராயர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.


“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படவில்லை” என்றார்.


குற்றவாளிகளைத் தப்பிவிட்டு அப்பாவிகளைச் சிறையில் அடைத்தால் எப்படி நீதி கிடைக்கும்? அதனால்தான் இன்று நாம் சர்வதேசத்திடம் நீதி கோரி நிற்கின்றோம் எனவும் அவர் இதன் போது அவர் கூறினார்.


"இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் வடக்கு, கிழக்கு, தெற்கு என நாடெங்கும் வாழும் மக்கள் பலர் துன்பங்களைச் சந்தித்துள்ளனர். அப்பாவிகளைச் சிறையில் அடைக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எதற்கு? எனவே, இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் அல்லது முழுமையாக மாற்றப்பட வேண்டும். இதை வலியுறுத்தியே அதற்கான மனுவில் நான் கையெழுத்திட்டுள்ளேன்” என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.


https://bit.ly/3uHGkH

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி