1200 x 80 DMirror

 
 

பெரு நாட்டில் இலகு ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் உள்பட 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பெரு நாட்டின் நாஸ்கா நகரில் மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.  அதில் டச்சு நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாவாசிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர்.

இந்நிலையில், விமானம் திடீரென விபத்திற்குள்ளானது.  விமானம் தரையில் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது.  இந்த விபத்தில் 7 பேரும் உயிரிழந்து உள்ளனர்.  இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி