மில்கோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட லசந்த விக்ரமசிங்க லங்கா உர நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர் அந்த பதவியை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை லசந்த விக்ரமசிங்க கடிதம் மூலம் நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா உர நிறுவனத்தின் புதிய தலைவராக லசந்த விக்கிரமசிங்க கடந்த 21ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

லசந்த விக்கிரமசிங்க மில்கோவின் தலைவராக இருந்த குறுகிய காலப்பகுதியில் மில்கோ நிறுவனத்தால் இலாபம் ஈட்ட முடிந்தது.

எவ்வாறாயினும், அவர் மில்கோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருக்கும்போதே அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கடந்த 19ஆம் திகதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய லசந்த விக்ரமசிங்க, புதிய தலைவர் நியமனம் தொடர்பில் தனக்கும் ஊடகங்கள் ஊடாகவே தெரியவந்ததாக அன்றைய தினம் தெரிவித்தார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் பலன் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஜனவரி 20ஆம் திகதி மில்கோவின் புதிய தலைவராக பொஹொட்டு கட்சியின் பொதுச் செயலாளர் ரேணுகா பெரேரா நியமிக்கப்பட்டார்.

மற்ற தலைவர்களின் நாற்காலிகள் அசைவதற்கான அறிகுறிகள்

இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் பல அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபைகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நிறுவனங்களின் தலைவர்கள் மட்டும் மாற்றப்பட்டு, சில நிறுவனங்களுக்கு பணிப்பாளர் குழு புதிதாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு விரிவான மாற்றத்தை கொண்டு வரும் நம்பிக்கையில் அரசு நிறுவனங்கள் மற்றும் வாரியங்களின் தலைவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி