கிளிநொச்சி வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 17 வயதான மகளும் தாயாரும் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் புன்னை நீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம்இடம்பெற்றுள்ளது, தந்தையும் மகனும் தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் இரவு 11.50 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 47 வயதான ஆனந்தராசா சீதேவி என்ற தாயாரும், 17 வயதான அவருடைய மகளுமே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை நடாத்திவருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி