மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கல் மோசடி தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த வழக்கின் 22 இல் 11 குற்றச்சாட்டுக்களில் இருந்தே கொழும்பு மேல்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் பிரதிவாதிகளை விடுதலை செய்துள்ளது.

இதேநேரம் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் 11 ஐ தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது என நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி