நாட்டில் மேலும் 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 555,700 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நேற்று மேலும் 22 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,108ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 13 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதுடன் இவர்களில் 30 வயதுக்கு கீழ்பட்ட ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.   

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி