சபிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தி என்ற பெயரில் சமகி ஜன பலவேகய ஏற்பாடு செய்திருந்த போராட்டம் இன்று (16) கொழும்பில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட சமகி ஜன பலவேகயவின் ஏராளமான எம்.பி.க்கள் மற்றும் பெருந்தொகையான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அழைக்கப்படுவதற்கு எதிராக பொலிஸார் கோரியுள்ள தடை உத்தரவு சில நீதிமன்றங்களில் பிறப்பிக்கப்படாத நிலையில்,மேலும் சில நீதிமன்றங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது மாகாண எல்லைகளை கடக்க அனுமதிக்கக் கூடாது என பொலிஸ் மா அதிபர் நேற்று (15) உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் திட்டமிட்டபடி கொழும்பில் போராட்டத்தை நடத்துவதற்கு சமகி ஜன பலவேகய கட்சி நடவடிக்கை எடுத்தது.

"நாங்கள் களனி கோவிலுக்கு வழிபடப் போகிறோம்! சாது சாது சாது"

நாட்டின் பலபகுதிகளில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு வந்த மக்களை பொலிஸார் தடுத்ததையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடியாதவர்கள் அதே இடங்களில் எதிர்ப்பை தெரிவித்ததாக சஜவே எம்பி எஸ்.எம். மரிக்கார் leader.lk இடம் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வருகைதந்திருந்த குழுவினர் திருப்பி அனுப்ப முயற்சிக்கப்பட்டபோது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் சமகி ஜன பலவேகயவின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே சூடான நிகழ்வுகள் இடம்பெற்றன.

அநுராதபுரத்தில் இருந்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலாஓயாவில் வைத்து பொலிஸார் தடுத்து நிறுத்திய போது, ​​களனி விகாரையை வழிபடப் போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபவனி இடம்பெற்றது.

பின்னர் பேரணியாக கொள்ளுப்பிட்டி சந்தி வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றனர்.

கடும் மழையையும் பொருட்படுத்தாமல், கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி முகத்திடலுக்கு பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், பின்னர் காலி முகத்திடலுக்கு அருகில் பிரதான பேரணியை நடத்தினர்.

சமகி ஜன பலவேகயவின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் சில வீதிகள் பல மணித்தியாலங்கள் முற்றாகத் தடைப்பட்டன.

மீண்டும் மக்கள் அரசாங்கம் அமைக்கப்படும் - சஜித்

எதிர்ப்பு பேரணியில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறிமதாச, நாட்டில் மீண்டும் ஒரு மக்கள் அரசாங்கத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

“இன்று இந்த நாட்டில் துன்பப்படும் மக்களின் விடுதலைக்காக இந்த பேரணியை நடத்துகிறோம்.இந்த நாட்டில் சர்வாதிகாரத்தை அனுமதிக்க மாட்டோம்.இந்த இறையாண்மையுள்ள இலங்கையில் பேச்சு சுதந்திரம் உள்ளது.இந்த நாட்டில் மக்கள் ஆட்சியை உருவாக்குவோம்.மக்கள் இந்த நாட்டின் பொறுப்பை சமகி ஜன பலவேகயவிற்கு வழங்குவார்கள்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி