கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு 2022 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளாா்.

சிறு வியாபாாிகள், முதலீட்டாளா்கள் உட்பட்ட பலருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்று 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடா்பான நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற அவா் குறிப்பிட்டுள்ளாா்

இலங்கையின் அரசாங்கத்தை இன்று எதிா்க்கட்சிகளை காட்டிலும், ஆளும் கட்சியினரே விமா்சிக்கின்றனா்.

அமைச்சா் விமல் வீரவன்ச, மற்றும் உதய கம்மன்பில ஆகியோா், அரசாங்கத்தை மோசடி மிக்க அரசாங்கம் என்று கூறுகின்றனா்.

எனவே அரசாங்கத்தின் மோசடி தொடர்பில் அரசாங்கக்கட்சியினரே வெளிக்கொணர்வதாக முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். அரசுக்கு சொந்தமான லிற்றோ எாிவாயு நிறுவனத்தின் தலைவா், நிறுவனத்தின் முன்னாள் தலைவா் 10கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்

இந்தநிலையில் முன்னாள் தலைவரை, அமைச்சா் பசில் ராஜபக்சவே நியமித்ததாக ரஹ்மான் தொிவித்துள்ளாா்.

கோட்டாபய ராஜபக்சவே இந்த விடயத்தை பொதுவில் தொிவிக்குமாறு தம்மிடம் கூறியதாக லிற்றோவின் தற்போதைய தலைவா் தெரிவித்துள்ளதாக முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளாா்.

முன்னாள் அமைச்சா் அனுர பிாியதா்சன யாப்பா, தற்போதைய அமைச்சரவை தோல்விக் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

எங்கே போகிறோம்? என்று தொியாத நிலையில் அரசாங்கம் சென்றுக்கொண்டிருப்பதாக அவா் தொிவித்துள்ளாா்.

இதேவேளை குறுகிய இரண்டு வருடங்களுக்குள் தோல்வியடைந்த அரசாங்கத்துக்கு எதிராக இந்த வரவுசெலவுத்திட்டத்தின் பின்னா் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடையும் என்றும் ரஹ்மான் தொிவித்துள்ளாா். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி