நான் எட்டு மணிநேர நீண்ட, தீர்க்கமான அறுவை சிகிச்சையை அக்டோபர் 1ல் எதிர்கொள்ளப்போகின்றேன். இந்த ஆண்டு மே மாதத்தில், நான் வாழ்க்கையில் இதேபோன்ற தீர்க்கமான சோதனைக்கு உட்பட்டேன் என்று ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

"இந்த குறுகிய காலத்தில், ஒவ்வொரு நாளும் ஒரு சவால் மட்டுமல்ல, வாழ்க்கையே ஒரு சவால் என்பதை நான் அனுபவத்தால் புரிந்துகொண்டேன். இதன் மூலம் நான் வாழ்க்கையில் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.

நான் ஆபத்தான சோதனைகளை எதிர்கொண்டேன். என் வாழ்க்கையில் பல விஷயங்கள் தொடர்பாக சோதனைகள். சவால்கள் மற்றும் அபாயங்களை எதிர்கொள்வதிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்கவில்லை.

ஆனால், வாழ்க்கை தொடர்பான ஒரு சோதனையை எதிர்கொள்வது சவாலானது மற்றும் ஆபத்தானது. வாழ்க்கையில் இரண்டு முறை ஒரே சவாலை எதிர்கொள்வது விசித்திரமானது" என்றும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"என்னைப் பற்றி விசாரித்த, எனக்காக பிரார்த்தனை செய்து,தங்களின் நம்பிக்கைகளின்படி மற்றும் இயற்கையில் நம்பிக்கை வைத்திருந்தவர்களுக்காக, எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றி. மக்களின் ஆதரவு என்னை மேலும் பலப்படுத்துகிறது. இதனை கடவுள் அல்லது இயற்கையின் தெய்வீக சக்தி என்று நினைக்கிறேன்.

இது எனக்கு மிக முக்கியமான இரண்டு தருணங்களில் சரியான நேரத்தில் எச்சரித்தது, நான் எந்த உடல் அசௌகரியத்தையும் உணரவில்லை என்றாலும். அது எவ்வாறு நடந்தது என்று என்னால் நம்ப முடியவில்லை.

என்னை மேம்படுத்தும் மக்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்த என்னை அர்ப்பணிக்க வேண்டும். நான் என்றும் உண்மைக்காகவும் சரியான விடயத்துக்காகவும் துணை நின்றதாக ஹரின் பெர்னாண்டோ தமது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி