கொவிட்19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் உடல்களை அடக்கம் செய்­வ­தற்கு கிண்­ணியா வட்­ட­மடு கிரா­மத்தில் 10 ஏக்கர் அரச காணி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இங்கு,  சுமார் 4000 உடல்களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்­கான இட­வ­ச­தி­யுள்­ள­தா­க கிண்­ணியா பிர­தேச செயலாளர் தெரி­வித்துள்ளார்.

மைய­வா­டிக்­கான உட்­கட்­ட­மைப்பு வச­திகள் துரித கதியில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. மைய­வா­டிக்குள் 14 பாதைகள் அமைக்கும் பணிகள் இடம்­பெ­று­கின்­றன. மைய­வா­டியைச் சூழ சுமார் 10 கிலோ மீற்றர் மதில் எழுப்­பப்­ப­ட­வுள்­ளது. மின்­சார வச­திகள் மற்றும் ஜனா­ஸாக்­களின் உற­வி­னர்­க­ளுக்­கான வச­திகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

கிழக்கு மாகாண இரா­ணுவ தள­பதி உட்­பட கொவிட் செய­லணி அதி­கா­ரிகள் இம்­மை­ய­வா­டியை பார்­வை­யி­ட­வுள்­ளனர்.

ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் கொவிட்19 மைய­வா­டியின் நிலப்­ப­ரப்பு ஜனா­ஸாக்­க­ளினால் பூர­ண­மா­கி­யுள்ள நிலையில் கிண்ணியா வட்­ட­மடு கிராம மைய­வா­டியை துரி­த­மாக ஏற்­பாடு செய்­யும்­படி கொவிட் செய­லணி வேண்டிக் கொண்டதற்கிணங்க அதன் பணிகள் விரை­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி