இவ்வாறானதொரு மாற்றம் ஏற்படும் என்று, தான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என மனதை தேற்றிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இன்று (16) அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், சுகாதார  அமைச்சிலுள்ள அதிகாரிகளிடம் உரையாடிய போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

எதிர்பாராத தருணத்தில் தனக்கு இந்த அமைச்சு மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தான் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் வரை தனது அமைச்சுப் பதவியில் மாற்றம் வரும் என தான் அறிந்திருக்கவில்லை என்றார்.

எது எப்படியாயினும் வாழ்க்கையில் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி