நீதிபதிகள் அழைக்கப்பட்டு நடாத்தப்பட்ட வெபினார் கருத்தரங்கில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டமை சம்பந்தமாக நீதித் துறையினதும், சட்டத் துறையினதும் கவனம் திரும்பியுள்ளது.

இன்று காலையில் நடைபெற்ற இந்த ஒன்லைன் கருத்தரங்கில் நீதிபதிகள் கட்டயாமாக கலந்து கொள்ள வேண்டுமெனவும், அவர்களுக்கு கடமை விடுமுறை அளிக்கப்படுமெனவும் நீதித்துறை சேவைகள் ஆணையத்தின் செயலாளரினால் நீதிபதிகளுக்கு எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இன்று (13) காலை ஒன்லைனில் நடைபெறும் கருத்தரங்கில் அவர்கள் கலந்து கொள்ளத் தவறினால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வெளிநாட்டுப் பயிற்சி மற்றும் உயர் நீதிமன்ற நியமனங்களுக்கான பரிந்துரைகளின்போது பரிசீலிக்கப்படுவார்கள் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு காரணத்தினால் கலந்து கொள்ள முடியாத நிலையிலுள்ள நீதிபதிகள், அந்தக் காரணங்களை நீதி சேவைகள் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நீதிபதிகளின் அமர்வுகளில் நடந்திராத இத்தகைய நிபந்தனைகள் சம்பந்தமாக கடுமையான அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி