மேற்காசியாவைச் சேர்ந்த ஈரானில், அதிபர் ஹசன் ருஹானியின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து, புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், அதிபர் பதவிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி, ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல்நாசர் ஹெமட்டி, ஈரான் புரட்சிப் பாதுகாப்பு படை முன்னாள் தலைவர் மோசன் ரெசாய் உள்ளிட்ட நான்கு பேர் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின. இதில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இப்ராகிம் ரைசி சக வேட்பாளர்கள் 3 பேரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

வாக்குப் பதிவு துவக்கம் முதலே மந்தமாக இருந்தது. சில இடங்களில் கடைசி நேரத்தில் வாக்குப் போட அதிகமானோர் கூடினர். அதனால் வாக்கு பதிவு நேரம், நேற்று அதிகாலை, 2:00 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இருந்தபோதிலும், ஈரான் வரலாற்றில் இல்லாத வகையில், இந்த தேர்தலில் வாக்குப் பதிவு மிகவும் குறைவாக இருந்தது.வாக்குப் பதிவு முடிந்ததை அடுத்து, வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

துவக்கத்தில் இருந்தே, இப்ராஹிம் ரைசியின் கை ஓங்கியிருந்தது. ஓட்டு எண்ணிக்கையின் இடையே அவர், 1.78 கோடி ஓட்டுகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேசான் ரெசாய்க்கு, 33 லட்சம் ஓட்டுகளும், அப்துல்நாசர் ஹெமட்டிக்கு, 24 லட்சம் ஓட்டுகளும் கிடைத்தன. அதனால் இப்ரஹிம் ரைசியின் வெற்றி உறுதியாகி விட்டது.

இப்ராஹிம் ரைசி ஈரான் தலைவர் ஆயதுல்லா அலி கோமேனியின் நம்பிக்கைக்கு உரியவராவார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி