போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனிதப் படுகொலைகளுக்கு தலைமை தாங்கி வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் கோஷ்டி
குற்றவாளியான கெஹல்பத்தர பத்மே, கொமாண்டோ சாலிந்த மற்றும் பாதாள உலகக் கோஷ்டியினர் பலருடன் தொடர்புடையவர் என்று அறியப்படும் மது என்ற பெண் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேற்படி பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினர்கள் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படும் தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளின் இடங்கள் மற்றும் அவர்கள் பயணித்ததாகக் கூறப்படும் இடங்கள் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2024 முதல் பெப்ரவரி 2025 வரை இந்த நாடுகளில் இந்த குற்றவாளிகள் தனித்தனியாக சுற்றித் திரிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குற்றவாளிகள் தாய்லாந்துக்கும் மலேசியாவுக்கும் இடையில் விமானம் மூலம் பயணிக்கவில்லை என்றும் மாறாக நிலவழிகள் வழியாக எல்லையைக் கடந்து சென்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இவ்விரு நாடுகளுக்கிடையிலான எல்லையானது ஆறு ஒன்றின் எல்லையாக உள்ளதால், இவ்விரு நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்திய பொலிஸ் குழுவினர், துறைமுகங்கள் ஊடாக சட்ட விரோதமாக படகுகள் மூலம் எல்லைகளுக்கு இடையில் இவர்கள் பயணித்துள்ளது தெரியவந்துள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இந்தக் குழு தாய்லாந்திலும் மலேசியாவிலும் சில நாட்கள் தங்கியிருந்து அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன் இந்த விசாரணையை நடத்தியது.
இந்தக் குற்றவாளிகள் தங்கியிருக்கும் நாடு பற்றிய தகவல்கூட வெளியாகியுள்ளது. தற்போது அந்நாட்டு பாதுகாப்புப் படையினருடன் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த குற்றவாளிகளின் விவரங்களை சர்வதேச பொலிஸார் சிவப்பு நோட்டீஸ்களாக வெளியிடும் போது, அவர்கள் தங்களுடைய வெளிநாட்டு கடவுச்சீட்டை மாற்றியிருப்பதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
கமாண்டோ சாலிந்தவை விட கெஹெல்பத்தர பத்மே இந்த இரு நாடுகளிலும் அதிக நேரம் செலவழித்து பயணம் செய்துள்ளார் என்பதும் கண்டறியப்பட்டது.
கெஹல்பத்தர பத்மே கடைசியாக மலேசியாவில் தங்கியிருந்தார் என்ற தெளிவான தகவல் பெப்ரவரியில் தெரியவந்தது. பெப்ரவரி மாதம் அவர் மலேசியாவில் இருந்து தாய்லாந்துக்கு பயணம் செய்ததும் தெரியவந்துள்ளது.
மது என்ற பெண் ஒரு கிராமத்தில் இருந்து கொழும்புக்கு வந்து போதைப்பொருள் வியாபாரிகளிடம் சிக்கிய நிலையில், கடத்தல்காரராக மாறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சில காலங்களுக்கு முன் அவர் டுபாய் சென்று அங்கு பிரபலமான பாதாள உலகக் குற்றவாளியின் சட்டவிரோத மனைவியாகத் தங்கியிருந்ததாகவும், ஒருமுறை டுபாய் விமான நிலையத்தில் அந்த பாதாள உலகக் கோஷ்டிக் குற்றவாளியிடம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர், மற்றொரு நாட்டில், பாதாள உலகக் கோஷ்டி நபரொருவருடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், அவரது பாதுகாப்பை இழந்ததன் காரணமாக, அவர் டுபாயில் தங்கியிருக்கும் மற்ற பாதாள உலக குற்றவாளிகள் பலருடன் சட்டவிரோத மனைவியாக அறியப்பட்டுள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.