வீதிகளில் பிச்சை எடுத்த மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பொருட்களை விற்பனை செய்த 21 சிறார்களை, பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் விசாரணைப் பிரிவு, சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத் தலைமையகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு ஆகியவை, பிச்சை எடுப்பதன் மூலமும் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் சிறுவர்களைக் கைது செய்து முறையான காவலில் வைப்பதற்கான சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கின.
கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொடை, கம்பஹா, பாணந்துறை, களனி, நீர்கொழும்பு, கல்கிஸை, களுத்துறை, தங்காலை, அநுராதபுரம், கண்டி, குருநாகல், சிலாபம், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மக்கள் அடர்த்தியான பகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் மற்றும் சமிக்ஞை விளக்குகளில் பொதுமக்கள் கூடும் இடங்களை உள்ளடக்கியதாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் பிச்சையெடுத்து பொருட்களை விற்பனை செய்த 21 சிறுவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உரிய காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.