பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியல்வாதிகளின்

உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்து, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் ஒன்று பிரதமர் அலுவலகத்திற்கு வந்துள்ளதாகக் கூறினார்.

அதன்படி, பிரதமர் அலுவலகத்தின் மேலதிகச் செயலாளர், இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். மேலும், மின்னஞ்சல் தொடர்பாக கூகிளிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டதாகவும், அந்த அறிக்கை கிடைத்துள்ளதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

மிரட்டல் மின்னஞ்சலின் ஐபி முகவரி நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியுடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பது தொடர்பாக, ஆகஸ்ட் 2024இல் அமைச்சின் அவசர தொலைபேசி எண் மூலம் புகார் பெறப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, பாதாள உலகக் கோஷ்டித் தலைரான 'லொக்கு பெட்டி'யின் கூட்டாளி ஒருவரே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக, அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

"அந்த முறைப்பாடு குறித்து நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். தகவல் அளித்தவர் அளித்த உண்மைகள் தவறானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்ட மொபைல் போன் எண் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. புகார் தொடர்பான உண்மைகள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன" என்று அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி