படைத் தளபதியாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (18) தனது அதிகாரப்பூர்வ

சமூக ஊடகக் கணக்குகளில் போர் வெற்றி குறித்து எந்தக் குறிப்பையும் வெளியிடத் தவறியது குறித்து, பிரதான ஊடகங்களில் மாத்திரமன்றி, சமூக வலைத்தளங்களிலும் பலரது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எனினும், நாளை (19) நடைபெறவுள்ள தேசிய போர் வீரர்கள் தின விழாவில் பங்கேற்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் முந்தைய அறிக்கைகள், ஜனாதிபதி அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்ததாகக் குறிப்பிட்டன. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஊடகங்கள் மூலம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைக் காண முடிந்தது.

போர் வெற்றிக்குப் பிறகு இந்த நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு ஜனாதிபதியும், தேசிய போர் வீரர்கள் தினம் குறித்து சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனது சமூக ஊடகங்கள் மூலம் இது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

“எங்கள் தாயகத்தையும் மக்களையும், 30 ஆண்டுகால போரிலிருந்தும் பயங்கரவாத அமைப்பிலிருந்தும் காப்பாற்றி, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மலைநாட்டை ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்து 16 ஆண்டுகள் ஆகின்றன. அதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் எங்கள் வணக்கமாகவும் மரியாதையாகவும் இது பொறிக்கப்பட்டுள்ளது” என்று சஜித் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தனது சமூக ஊடகங்களில் ஒரு நீண்ட பதிவை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மரண பயமின்றி, பாதுகாப்பாக, தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் சம உரிமைகளுடன் வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவது, பல தசாப்தங்களாக நாம் கூட்டாகக் கண்ட கனவு. அது மக்களின் தலைவராக நான் தனிப்பட்ட முறையில் கண்ட ஒரு கனவு என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நமது வீரமிக்க போர் வீரர்கள் தங்கள் ஆயிரக்கணக்கான உயிர்களைத் தியாகம் செய்து பாதுகாத்த அந்த மகத்தான, சுதந்திரமான தாய்நாட்டை நான் மண்டியிட்டு வணங்கினேன். இனிமேல், நான் உயிருடன் இல்லாவிட்டாலும், நம் தாய்நாடு ஒரே சிங்கக் கொடியின் நிழலின் கீழ் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்பதே எனது ஒரே பிரார்த்தனையாக இருக்கிறது” என்று, மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தேசிய போர் வீரர்கள் தினம் தொடர்பாக பல கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி