அனுராதபுரம் தலாவ பிரதேசத்தில் காட்டுயானை யானை தாக்குதலுக்கு உள்ளான ஏழு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 4:30 மணி அளவில் இந்த பெண் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

தாக்குதலில் பெண்ணின் இரண்டு கால்களும் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சூரியவெவ வெலிவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகிய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யானைகள் மேலாண்மை வனப்பகுதிக்கு சென்றுள்ள நிலையில் இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி