அமெரிக்காவின் சான் டியேகோ பகுதியில், 5.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தரை மட்டத்திலிருந்து 13.4 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதன் தாக்கம், கலிபோர்னியாவின் ஆரஞ்சு மற்றும் லொஸ் ஏஞ்ஜல்ஸ் மாவட்டங்கள் வரை உணரப்பட்டது.
சான் டியேகோ சஃபாரி பூங்காவில் வசிக்கும் யானைக் கூட்டமும், நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கலக்கமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.