எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 37 வேட்புமனுக்களை
மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுக்களை ஆராய்ந்த பிறகு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் முகமது லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி.பெர்ணான்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு, இந்த உத்தரவைப் பிறப்பித்தது.