இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பந்துர திலீப விதாரண தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அதன்படி, அவர் சம்பந்தப்பட்ட கடிதத்தை போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்துக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய கலாநிதி பந்துர திலீப விதாரண, நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராவார். இருப்பினும், அவர் பதவி விலகியதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிறுவனங்களின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த மூன்றாவது நபராக கலாநிதி பந்துர திலீப விதாரண காணப்படுகிறார்.
முன்னதாக, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் ருவான் விஜயமுனி ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.