பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ், நேற்று வியாழக்கிழமை வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

புற்றுநோய் சிகிச்சையுடன் தொடர்புடைய தற்காலிக பக்க விளைவுகள் ஏற்பட்டமையினால் மேற்கொள்ளப்பட வேண்டிய கண்காணிப்பு சிகிச்சை நடவடிக்கைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நேற்று வியாழக்கிழமை மதியம் மற்றும் இன்று வெள்ளிக்கிழமைகளில் அவரது பொது நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தனக்கு ஒரு வகையான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் அறிவித்ததிலிருந்து, மன்னரின் உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

76 வயதான சார்ள்ஸ், சுமார் மூன்று மாதங்கள் பொதுப் பணிகளில் இருந்து விலகி இருந்தார், ஆனால் அரசாங்க ஆவணங்களை மதிப்பாய்வு செய்தல் மற்றும் பிரதமரைச் சந்தித்தல் போன்ற அரசுப் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்.

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னரும் பிரித்தானிய முடியாட்சியின் மீது சார்ள்ஸின் புற்றுநோய் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி