பெரிதும் விவாதிக்கப்பட்ட விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை, நாளை வெளியிடப்படும் என்று

விவசாயத்துறை அமைச்சர் கே.டீ. லால் காந்த கூறுகிறார். இருப்பினும், அதை முற்றிலும் தெளிவான அறிக்கையாகக் கருத முடியாது என்றும் லால் கூறுகிறார். எதிர்காலத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு இன்னும் பல சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும் என்பதையும் லால் நமக்கு நினைவூட்டுகிறார்.

வனவிலங்கு கணக்கெடுப்பு மூலம் விலங்கு மேலாண்மையை நாம் பரிசீலிக்கலாம் என்றும் அதன்படி, வெளிநாடுகளுக்கு அதிக விலங்குகளை ஏற்றுமதி செய்வதா அல்லது வேறு நடவடிக்கைகளை எடுப்பதா என்பதை முடிவு செய்யலாம் என்றும் லால் கூறுகிறார்.

இதற்கிடையில், குரங்குகள் மற்றும் மந்திகளின் பிரச்சினைகளுக்கு விடை காண, ஜகத் மனுவர்ண நியமிக்கப்பட்டிருந்தார்.

குரங்குகளை ஒரு தீவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்திற்கு, நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக ஜகத் மனுவர்ண கூறுகிறார். இதுவும் ஒரு முன்னோடித் திட்டம் என்றும், செயல்படுத்தப்பட்ட பின்னரே இதன் நன்மை தீமைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

அதன்படி, ஹேவாஹெட்டா தேர்தல் தொகுதியில் உள்ள 15 கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்னோடித் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று ஜகத் மனுவர்ண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி