1200 x 80 DMirror

 
 

முன் பதிவு செய்யப்பட்ட

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பதாரர்கள் மட்டுமே குடிவரவு மற்றும் குடியகல்வு தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்று குடிவரவுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு முன் பதிவு செய்யாமல் செல்வதை தவிர்க்குமாறு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
 
பதிவு செய்ததன் பின்னர் முன்னுரிமை முறைமைக்கு அமைவாக கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
01.01.2025 முதல், அரசாங்கம் இலங்கையர்களுக்கு திறமையான மற்றும் பாதுகாப்பான புதிய ஈ- கடவுச்சீட்டுகளை வழங்கவுள்ளது.
 
அதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக, கீழே காட்டப்பட்டுள்ள முறைப்படி விண்ணப்பிக்கும் முறை புதிய முறையாக செயல்படுத்தப்படும்.
 
ஜூலை 16 முதல், கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க https://www.immigration.gov.lk/ என்ற இணையத்தில் முன் பதிவு செய்யலாம் .
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி