வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் சமீப காலமாக நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளது, 
 
இதன் விளைவாக தங்கத்தை அடமானம் வைப்பது வேகமாக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
 
2019 ஆம் ஆண்டில் சுமார் 210 பில்லியன் ரூபாவாக இருந்த அடமான முற்பணங்களின் நிலுவைத் தொகை, மார்ச் 2024 க்குள் 172 சத வீதமாக அதிகரித்து 571 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அரசாங்கம் கூறுகிறது.
 
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அடமான முற்பணத்தைப் பெற்ற குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியதன் அவசியத்தை உரிமம் பெற்ற வங்கிகள் அங்கீகரித்துள்ளன.
 
அதன்படி, 2024 ஜூன் 30 அல்லது அதற்கு முன் உரிமம் பெற்ற வங்கிகளில் இருந்து தனிநபர் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் 100,000 ரூபாவுக்கு அடமான முன்பணம் பெற்றிருந்தால் ஆண்டுக்கு அதிகபட்சமாக 10 சத வீதக்கு உட்பட்டு, பொருத்தமான திட்டத்தை செயற்படுத்துவதற்கான வட்டி மானியம் வழங்கப்படவுள்ளது.
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி