1200 x 80 DMirror

 
 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்

பத்தேகம மற்றும் பின்னதுவவுக்கு இடைப்பட்ட 92 கிலோ மீற்றர் பகுதியில் இரண்டு கார்கள் மோதியதில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த காரின் சாரதி உறங்கியதால், நடுவில் இருந்த இரும்பு வேலியில் கார் மோதி அதே திசையில் பின்னால் வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 
இந்த விபத்து காரணமாக  வீதி முற்றாக மூடப்பட்டு கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் வீதியைத் தவிர்த்து வெளியில் சென்று மீண்டும் வீதிக்குள் நுழைந்து பயணித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி