1200 x 80 DMirror

 
 

ஐஸ் போதைப்பொருளுடன் கைது

செய்யப்பட்ட 41 வயதுடைய நபருக்கு சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்  எச்.ஐ.வி வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டி, தொடம்வல பிரதேசத்தை சேர்ந்த இவர் கேகாலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்  தனக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
 
கேகாலை பொலிஸாரினால் பெறப்பட்ட அறிக்கையில், சந்தேக நபரின் வாக்குமூலத்தின் உண்மை நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனைக்கு பழக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி