இந்த நாட்டின் வரலாற்றில் எந்தவொரு

காலத்திலும் சட்ட மா அதிபருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை எனவும் அது அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ. எல். பீரிஸ் இன்று (10) தெரிவித்தார். 

நாடாளுமன்ற உறுப்பினர்  ஜீ. எல். கொழும்பில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
சட்டத்தின் நீதியை நிறைவேற்றுவதற்கு சட்ட மா அதிபருக்கு தனித்துவமான பொறுப்புகள் இருப்பதாகவும், 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சட்ட மா அதிபர் ஒருவரின் சேவை நீடிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறினார்.
 
இன்னும் 34 நாட்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சட்ட மா அதிபரின் பதவிக்காலத்தை ஜனாதிபதி ஆறு மாதங்களுக்கு நீடித்தால், சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரத்துக்குப் பேரிடியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார். 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி