எல். பி. L2024 கிரிக்கெற்

போட்டியில் ஆட்ட நிர்ணயத்தில் செல்வாக்கு செலுத்தியதாக கூறப்படும் தம்புள்ளை தண்டர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான பிரித்தானிய பிரஜை தமீம் ரஹ்மானை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையும் 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும் வழங்க உத்தரவிடப்பட்டது.
 
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முயற்சித்த சந்தேகநபர் கடந்த 22 ஆம் திகதி விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி