இலங்கையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட

பாகிஸ்தான் பிரஜைகள் 9 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி  முதலாம் திகதி  பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், சந்தேக நபர்கள் 614 கிலோ கிராம் 36 கிராம் ஐஸ் மற்றும் 581 கிலோகிராம் 34 கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

அந்த போதைப்பொருட்கள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாளரின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ள நிலையில்  கைப்பற்றபட்டவை போதைப்பொருள் என்பது நிரூபிக்கப்பட்டது.  

இதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​குறித்த பாகிஸ்தானிய பிரஜைகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி