கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக பரீட்சை

நிலையத்துக்குச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் வீடு திரும்பாமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக   கினிகத்தேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு மாணவிகளும் நேற்று (14) காலை பரீட்சை நிலையத்துக்குச் சென்றுள்ளதாகவும்   அவர்களில் ஒருவர் பெற்றோருடன் பரீட்சை நிலையத்துக்கு சென்றதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இரண்டு மாணவிகளும் பரீட்சை ஆரம்பிக்கும்  முன்பு பரீட்சை மண்டபத்துக்கு அருகில்    பேசிக் கொண்டிருந்ததை  பல மாணவர்கள்  கண்டுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி