ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம், எதிர்வரும் 24ஆம் திகதியன்று, உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தைத் திறந்து வைப்பதற்காகவே, ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என, நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம், ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி