1200 x 80 DMirror

 
 

விமலும் கம்மன்பிலவும் இல்லாத மொட்டு எவ்வாறானது? யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?ரட்டே ரால குறிப்பிடுவது பருப்பு இல்லாத ஹோட்டலை போன்று. உண்மையில் விமல் மற்றும் கம்மன்பில இல்லாமல் இருப்பது மொட்டுவுக்கு எவ்வாறு தாக்கம் செலுத்தும்? அது மொட்டுக்கு சாதகமானதா பாதகமானதா ? அது தொடர்பில் நியாயமான ஒரு ஆய்வை மேற்கொள்வதாக இருந்தால் தற்போது மொட்டுவில் இருக்கக்கூடிய எண்ணிக்கையை சரியாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

 

சிறிய கட்சி கூட்டணியை விடுத்து அடுத்த எல்லாம் மொட்டுவினுடையமது என்று யாருக்காவது சொல்ல முடியும். ஆகையால் அதனை ரட்டே ரால ஒரு போதும் ஏற்றுக்கொள்வது கிடையாது. இதனுள்ளே இன்னும் பல பிரிவுகள் காணப்படுகின்றன. அதாவது வெறுப்படைந்த மொட்டு உறுப்பினர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் இந்த நிலையை தற்போது அளவிட்டு பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அதேபோன்று வெறுப்புணர்வோடு இருக்ககூடிய மொட்டுவின் சிரேஷ்ட்ட உறுப்பினர்கள் வாயை திறக்காவிடினும் அவர்கள் விமலிற்கும் கம்மன்பிலவிற்கும் நடந்ததை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பது உறுதி. எங்களுக்கும் இதுதான் நடக்கும் என்ற பயத்தினால் அவர்கள் வாயை மூடி இருக்கின்றார்கள். அதற்குப் புறம்பாக ரட்டே ரால தொடர்ச்சியாக குறிப்பிட்டது ராஜபக்சக்களுக்கிடையே பிளவுகள் இருப்பதாக. தற்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சிறிய கட்சி கூட்டணியின் ஊடக கலந்துரையாடலில் விமல் அதனை நிரூபித்திருக்கிறார். இதற்கு முன்னரும் ஜனாதிபதி பதவி விலகல் கடிதத்தை அனுப்புமாறு கேட்டிருக்கின்றார். அப்போது மஹிந்த பைத்தியமா என்று எழுதிய அந்த பதவி விலகல் கடிதத்தை ஏதோ ஒரு அடிப்படையில் நிறுத்தியுள்ளார். அந்த இடத்தில் மஹிந்த பைத்தியம் என்று குறிப்பிட்டது யாருக்கு என்பது இன்னும் தெரியவில்லை.

அதேபோன்று தொடர்ச்சியாக பெசில் அவருக்கு அவசியமான வகையில் கோட்டாபயவை வழி நடத்துகிறார் என்று விமல் குறிப்பிடுகின்றார். அப்போது எங்களுக்கு வெளிப்படையாக இதன் உள்ளே இரண்டு குழுக்கள் இருப்பதை காண முடிகின்றது. அவையாவன மஹிந்த, பெசில்,அடுத்தது பெசில் பலவந்தமாக வழிநடாத்தும் கோட்டாபய. தற்போது ரட்டே ரால தொடராக குறிப்பிட்டு வந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜபக்சக்களிடையே பிளவு உள்ளது. அடுத்ததாக பாருங்கள் அந்த பிளவு ஏற்பட்டது என்ன காரணத்திற்காக என்று? உண்மையில் இந்தப் பிளவானது ஏற்பட்டிருப்பது அதிகாரம் தொடர்பில் ஆகும். எதிர்கால அரசியல் பலம் தொடர்பில் ஆகும். விமல் குறிப்பிடுகின்ற அடிப்படையில் 2015ஆம் ஆண்டு தோல்வியின் பின்னர் பெசில் மஹிந்தவின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கேட்டுள்ளார். அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் வருவதற்கு அவர் முயற்சி செய்துள்ளார். அதற்கு விமல் இணங்கவில்லை. சில சந்தர்ப்பங்களில் விமலுக்கு பின்னர் மஹிந்தவும் இருந்திருக்க கூடும். அடுத்ததாக பொது ஜனபெரமுன என்பது பெசிலின் தனிப்பட்ட சொத்து என்று விமல் குறிப்பிடுகின்றார். கடந்த காலத்தில் மகிந்தவின் பிரதமர் பதவியை கழற்றுவதற்கு பெசில் பெரிய முயற்சி எடுத்தார் என்பது நாட்டுக்கு தெரியும்.

அவ்வாறாயின் ஒன்று வெளிப்படையானது. பெசில் இந்த அனைத்தையும் செய்வது 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு வர.ரட்டே ரால சொன்ன அனுமானத்தை தற்போது விமல் அதனை உறுதிப்படுத்தி உள்ளார். பெசில் மஹிந்தவை மீறி அதிகாரத்திற்கு வருவதற்கு முயற்சி செய்த பல சந்தர்ப்பங்கள் இதனுள்ளே காணப்படுகின்றது. பெசிலுக்கு அதனை செய்வதற்கு முடியாது. எனினும் அவர் அந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். இருப்பினும் மஹிந்த தன்னுடைய அரசியல் அனுபவத்தை பயன்படுத்தி அவை அனைத்தையும் தோல்வியடைய செய்துள்ளார்.விமல் அதற்கு அதிகம் உதவி செய்திருக்க கூடும். இன்றும் மஹிந்தவுக்கு அந்த தைரியம் காணப்படுகின்றது. உடலியல் ரீதியாக அவர் பலவீனமானராக இல்லையாயின் மஹிந்த தற்போதும் நல்ல ஒரு தைரியம் உடையவர் தான். எவ்வாறு இருப்பினும் பெசில் குடும்பத்தினரிடையே அதிகாரம் ஏலம்கோரப்பட்டுள்ளது என்பது வெளிப்படையானது. இருப்பினும் தற்போதைய பிரச்சினை ஏன் மஹிந்த பெசிலிற்கு இடம் வழங்காமை எப்பதாகும்.கோட்டாபயவிற்கு பின்னர் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பதில் நபராக வர பெசில் பொருத்தமானவரா,

ரட்டே ராலவிற்கு என்றால் எந்த ராஜபக்சக்கள் என்றாலும் ஒன்றுதான். பெசிலுக்கு மஹிந்த வழங்கவில்லை என்றால் மஹிந்தவிடம் option ஒன்று இருக்கிறது. அதாவது அது தினேஷ் குணவர்தன இருக்க முடியாது தானே.டலஸ்ஸோ விமலோ இருக்க முடியாது. அவசியம் எனின் எந்தவொரு சிறுபிள்ளைக்கும் மஹிந்தவின் option என்னவென்று தெரியக் கூடியதாக இருக்கும். அவ்வாறாயின் மஹிந்த பெசிலுக்கு வழங்காமல் கோட்டாபயவுக்கு வழங்கியிருப்பது ஏன். அவசியம் எனின் இன்னும் ஒரு தடவை வழங்கி 2030ஆம் ஆண்டு நாமலுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்று. மஹிந்தவுக்கு தெரியும் கோட்டாபயவிற்கு வழங்கினால் மீண்டும் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்று.பெசிலுக்கு வழங்கினால் அதனை நினைத்துப் பார்க்கவும் முடியாது என்று. அதிகாரம் தொடர்பான விடயத்தில் பெசிலைப்போன்றே மஹிந்தவும். இருவரும் செத்த பிணங்கள். இருப்பினும் தற்போது கோட்டாபயவுக்கு பலவீனம் என்பதனால் 2024 ஆம் ஆண்டு வெற்றிடம் ஒன்று ஏற்பட இருக்கின்றது. இந்த நாட்டினுடைய மக்கள் மீண்டும் அதிகாரத்தை கனவில்கூட கோட்டாபயவிற்கு வழங்குவார்கள் என்று நினைக்க முடியாது. அதனால் வெற்றிடத்தை நிரப்புவதற்கு பெசில் முயற்சி செய்கின்றார். அதை நிரப்புவதற்கு முடியுமா என்பது இந்த இடத்தில் இருக்கக்கூடிய வேறு பிரச்சினையாகும்.

ஒரு மனிதருக்கு அவ்வாறான கனவு ஒன்று இருக்க முடியும். மஹிந்த வழங்கவில்லை என்றால் இதனை எவ்வாறாவது சரி செய்ய வேண்டுமல்லவா. பெசிலும் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும். அவர் ஒரு மூத்த மனிதர் அல்லவா. பெசில் ப்ளேன் ஒன்றை செய்திருக்கின்றார். அது நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் 2030 இல் நாமலுக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும். மஹிந்தவுக்கு அது தெரியும். அதனால் தற்போது மஹிந்தவிடம் இருக்கக்கூடிய பதில்தான் 2030 க்கு நாமலை அனுப்புவதை விட 2024 இல் நாமலை அனுப்புவதே ஆகும். அதாவது பெசில் மஹிந்தவிடம் 2015 இல் இருந்து ஒரு சந்தர்ப்பத்தை கேட்டுவரும்போதும் மஹிந்த அதற்குரிய வழியை வழங்கவில்லை. தற்போது பெசிலுக்கு கோபம் வந்துள்ளது. தற்போது அவர் உருவாக்கிய அந்த திட்டத்தோடு நோக்கி செல்கின்றார். இந்த இடத்தில் விமல் குறிப்பிட்ட விடயம் சரியானதே. அந்த எண்ணத்திலேயே பெசில் மொட்டுவை உருவாக்கிறார். இன்று விமலுக்கு அது தெரிந்த போதும் அன்று விமலுக்கு அது தெரியவில்லை. தெரியவில்லை அல்ல தெரியாதது போன்று இருந்தார். சுருக்கமாகச் சொன்னால் விமல் 2017 குழந்தையானார்.

இல்லையெனின் பெசிலின் இந்த தேவையை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக உடைந்து பெசிலுக்கு உதவுமா?பெசிலுடன் இணைந்து விமல் அதனை செய்தார். இருப்பினும் பெசில் அதற்கு ஒத்துக்கொண்ட கணக்கை விமலிற்கு வழங்கவில்லை. விமல் கேட்டது பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை தமக்கு வழங்குமாறு. வழங்காமல் இருந்ததனால்தான் விமல் பெசில் முரண்பாடு ஏற்பட்டது. அந்த முரண்பாட்டின் உள்ளே உள்ள ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மஹிந்த அதனை நாமலுக்காக பயன்படுத்தினார். விமல் தெரிந்தோ தெரியாமலோ சுய விருப்பில் அவற்றை மேற்கொண்டார். அந்த நிலையில்தான் மொட்டுவின் ஒரு அதிகாரம் மிக்கவராக பெசில் வந்தார்.மொட்டுவின் முக்கிய நபர்களை தம்வசப்படுத்தினார். முக்கிய நபர்கள் மாத்திரமல்ல சிறிய கட்சியினர்களையும் தன்வசப்படுத்தினார். விமலின் கட்சியினுடைய நபர்களையும் அவர் தன் வசப்படுத்தினார். இன்று அந்த இடத்தில் விமலுடன் உள்ளவர்களையும் பிடித்து இருக்கின்றார். தேவையான சந்தர்ப்பத்தில் பெசில் அவர்களை வெளியே எடுப்பார். அவ்வாறான ஒரு நிலையில் தான் விமலை பற்றி நாங்கள் பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது.

அடுத்ததாக இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தை கவனத்திற் கொள்ளல் வேண்டும். அதுதான் மொட்டுவின் உரிமையாளர் யார் என்பது? மஹிந்தவின் உடையதா அல்லது பெஸிலின் உடையதா? இந்த கேள்விகளுக்கு பதிலை தேடும்போது விமல், கம்மன்பில இன்னும் மொட்டுவில் இருக்க வேண்டுமா இல்லையா என்பதனை தீர்க்க முடியும். உண்மையில் மஹிந்தவின் Angele லில் நாங்கள் பார்த்தால் விமல் கம்மன்பில இன்னமும் மொட்டுவில் இருத்தல் வேண்டும்.மஹிந்தவின் இலக்கை நோக்கி செல்வதாக இருந்தால் விமல், கம்மன்பில உள்ளிட்ட சிறிய கட்சிகள் அவசியம். அந்த இடத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை எடுக்க முடியாமல் போகும். இருப்பினும் அடுத்தவர்களை எடுக்கக் கூடியதாக இருக்கும். அதாவது நாமலுக்கு கிரீடத்தை அறிவிப்பதற்கான அந்த project ற்கு விமல் போன்றவர்கள் அத்தியாவசியமாகும். இருப்பினும் பெசிலின் Angele லில் பார்த்தால் அவருடைய பயணத்திற்கு இருக்கக்கூடிய இரண்டு ஆணிகளாக காணப்படுபவர்கள் விமலும் கம்மன்பிலவும். ஏனென்றால் குறித்த இரண்டு பேரும் மஹிந்தவின் உடைய வழியிலே இருக்கின்றார்கள். அதனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பெசில் முயற்சிப்பது அந்த இரண்டு ஆணிகளையும் பிடுங்குவதற்கு தான்:

விமல் குறிப்பிடுகின்ற அடிப்படையில் பெசில் பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் அந்த விடயத்தை செய்து இருந்தார். பாராளுமன்றம் வருகை தந்ததன் பின்னரே கூடுதலாகக் காணப்பட்டது. அதாவது கடந்த காலத்தில் மொட்டுவின் அமைச்சர்கள் விமல் போன்றவர்களுக்கு நன்மைகளை தெரிவிக்காது நன்மைகளை பகிர்ந்தது பெசிலின் தேவைகளுக்கே. ரோஹித,ஜோனி,எஸ்எம்,குட்டி போன்றவர்களின் குரல்களுக்கு பின்னால் இருந்தது பெசிலே.இருப்பினும் இவையாவற்றின் இறுதி கொத்தணியாக மாறியது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே. தாம் அதிகாரத்துக்கு வருவதற்கு அதிகபட்சமாக உதவி செய்த இருவரதும் கழுத்தை வெட்டும் அளவுக்கு ஜனாதிபதி ராசியற்றவராக மாறியுள்ளார். உண்மையில் விமல் குறிப்பிடும் வகையில் கோட்டாபயவுக்கு கத்தியை கொடுத்தவர் பெசிலே. அதிலிருந்து எங்களுக்கு இவ்வாறு நினைக்க முடியும். கோட்டாபயவுக்கு இந்த அனைத்து விதமான வேலைகளுக்கும் கயிற்றை வழங்குவது பெசில் என்று.அதேபோன்று ரட்டே ரால இன்னமும் விசுவாசம் கொள்வது விமல் போன்றவர்கள் கடந்த 2ஆம் திகதி மேற்கொண்ட அந்த நாடகத்திற்கு பின்னால் இருப்பது மஹிந்த என்று.அதன் பிரதி மஹிந்தவின் உடையது.

வேலை பிழைத்ததற்கு காரணம் நடிகர் எழுதிக்கொடுத்த இருவகையான உரையாடல்களுக்கு மேலதிகமாக அந்த விடயத்தை சொல்ல முற்பட்டபோது தான். அதாவது அந்த மாத்திரையை கூடுதலாக எடுத்தது. ஓவர் ஓவர்டோஸ் ஆகியமை. ரட்டே ரால குறிப்பிடுவது மஹிந்த இந்த நிலையை நன்றாக நினைத்து மீண்டும் ஒரு திரைக்கதையை எழுதுவார். தற்போது நீங்கள் இருக்கக்கூடிய அந்த சூழ்நிலையை பாருங்கள் அவ்வாறு நடைபெறுகிறதா இல்லையா என்று. இருப்பினும் இந்த நடிகர் இருவரும் போராடுகின்ற நடிகர்களாக வர முடியாமல் உள்ளனர். ஏனென்றால் அது அந்த பரம்பரையின் 5 வது சபையாக இருப்பதாகும். உண்மையில் ரட்டே ரால குறிப்பிடுவது அந்தத் திரைப்படம் அண்மித்து அண்மித்து வரும்.coming துண்டுகள் தற்போது வருகின்றது.அதனை சரியாக செய்தால் அந்த இருவருக்கும் மீண்டும
ஒரு சான்சை ஒன்றை பெறமுடியாமல் இல்லை. இருப்பினும் தற்போது இருக்கக்கூடிய போராட்டத்தில் பெசில் வெற்றிபெற்றுள்ளார். பெசிலின் நிலைக்கேற்ப விமலையும் கம்மன்பிலவையும் துரத்துவது அவருக்கு நல்லது.பார்ப்போம் மஹிந்த வேறு ஏதாவது ஒரு புதிய போராட்ட அறிமுகத்தை கொண்டு வருகின்றாரா என்று. ஏனென்றால் விமல் குறிப்பிடுகின்ற அடிப்படையில் ஜனாதிபதிக்கு பெசில் குறிப்பிட்டிருப்பது விமலும் கம்மன்பிலவும் அமைச்சரவைக்கு வருவதாக இருந்தால் தான் வரமாட்டேன் என்று.

அதற்கிணங்க தான் கோட்டாபய அந்த வேலையை செய்துள்ளார். அவசியம் என்றால் மஹிந்தவுக்கும் சொல்ல முடியும் விமலும் கம்மன்பிலவும் இல்லாத அமைச்சரவைக்கு நான் வரமாட்டேன் என்று. ஏனென்றால் பெசிலைவிட மஹிந்தவுக்கு பெரிய அழுத்தத்தை கொடுக்க முடியும்.ரட்டே ரால குறிப்பிடப்படுகின்ற இந்த எந்த ஒன்றும் செய்ய முடியாமல் இல்லை. நாமலுக்காக மஹிந்தவிற்கு அவ்வாறு செய்ய முடியாமலும் இல்லை. இதிலிருந்து இந்த நாட்டுக்கு கற்றுக் கொள்ளக் கூடிய பெரிய அரசியல் பாடம் ஒன்று இருக்கின்றது. முழு நாடும் சரியான பாதைக்கு என்று சொல்லி அவ்வாறு இல்லை என்றால் பெசிலை வர்ணித்து வருகின்ற எந்த ஒன்றும் அதிகாரப் போட்டிக்கே. அதன் உள்ளே இருப்பது மஹிந்த அல்லது பெசில். அடுத்ததாக மொட்டுவில் இருக்கக்கூடிய ராஜபக்சவாதிகளுக்கு இதன் மூலம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடம் இதனுள்ளே காணப்படுகின்றது. வரலாற்றில் ஒருநாள் ரட்டே ரால விமலுக்கும் இதனை குறிப்பிட்டிருக்கின்றார். யாராவது ஒருவர் ராஜபக்ஷக்களுக்கு தலையை பணித்தால் அவர்களது தலையை கீழ்படும் அளவுக்கு பணியச்செய்வார்கள். இறுதியில் நிலத்தில் வைத்து காலால் உதைத்து சும்மா விடுவார்கள்.

இதனை மஹிந்த செய்வது வேறு அடிப்படையில். அதாவது நோகாதவாறு.பெசில் நேரடியாக கால் பூட்டு போடவதுபோல் செய்துவிடுவார். இருவரும் செய்வது ஒரே வேலையைத்தான். இருப்பினும் அவை இரண்டு வகையான முறை அதுதான் வேறுபாடு. அதற்குத்தான் சிறந்த உதாரணம்தான் விமல் மற்றும் கம்மன்பில. இந்த இடத்தில் ஒரு விடயம் உறுதிபடுகின்றது. ராஜபக்சக்களை உயர்த்துவதற்கு கைகொடுத்தவர்கள் எழும்போது ராஜபக்சக்கள் அடிப்பார்கள். உதவி செய்தவர்களுக்கு வரும்போதே தாக்கும் அளவு தன்மை கொண்ட ராஜபக்சக்களைப்போன்ற நல்ல மனிதர்களை ரட்டே ரால இந்த நாட்டில் இன்னும் காணவில்லை. அதே போன்ற தன்மை விமலிடமும் காணப்படுகின்றது. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதான் உண்மையாகும்.

அப்படியாயின் போய் வருகின்றேன் கடவுள் துணை, வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு
ரட்டே ரால

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி