1200 x 80 DMirror

 
 

பாகிஸ்தானின் பெஷாவர் நகரம் – கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

மசூதியில் ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக 30 பேர் உயிரிழந்ததாகக் கூறிய நிலையில் தற்போது 57 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 200 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என பெஷாவர் பொலிஸ் அதிகாரி ஹரூன் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெஷாவர் குண்டுவெடிப்புக்கு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி