1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரசாங்கத்தின் அமைச்சரவைப்

பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட பல கருத்துக்கள் பொய்யானவை என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

விஜித ஹேரத் எதிர்க்கட்சியில் இருந்தபோதும், அரசாங்கத்தில் இருந்தபோதும் பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் அங்கு தெரிவித்தார்.

அப்போது எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எண்ணெய் விலையில் இருந்து கிடைக்கும் பணம் பக்கெற்றுக்கு எமது  செல்வதாக கூறியிருந்த நிலையில் தற்போது அந்தப் பணம் பொறுப்பான அமைச்சர் அநுரகுமாரவின் பாக்கெற்றுக்கு செல்கிறது என்றே கூற வேண்டும்.

மக்களுக்கு உண்மையை புரிய வைத்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி