1200 x 80 DMirror

 
 

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு

மகா கதிர்காம விஹாரையில், எசல பெரஹெரா ஆரம்பமாகி சில நிமிடங்களில் ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த யானை ஒன்று குழப்பம் விளைவித்ததால் ஏற்பட்ட அசாதாரண நிலையின்போது ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சுமார் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

ஊர்வலம் ஆரம்பமான பின்னர் நேற்று (6) இரவு 9.00 மணியளவில் இது இடம்பெற்றதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது, ​​ஊர்வலத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பீதியடைந்து, பக்கமாக ஓடியதில் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் எவரின் நிலையும. கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி