1200 x 80 DMirror

 
 

சிறிய கட்சி கூட்டணி தங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட வேலை தொடர்பில் நேற்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தார்கள். வேலை ஆரம்பிக்கப்பட்ட இடமே லொக் போல. 2ஆம் திகதி முழு நாட்டையும் சரியான பாதைக்கு என்று குறிப்பிட்டு அந்த மேடையில் இருந்த அனைத்து கட்சிகளது தலைவர்களும் நேற்று காணப்படவில்லை. சிறு கட்சி கூட்டணியின் முக்கியமான பங்குதாரராக இருக்கக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பக்கத்திலிருந்து அனுப்பியிருந்தது ஒரு முன்னாள் மாகாண சபை உறுப்பினரே. அவர்கள் அந்த வேலை தொடர்பில் கவனத்தில் கொள்ளவில்லை.

எவ்வாறு இருந்த போதிலும் இந்த போராட்டத்தின் இறுதி பிரதிபலனாக நடைபெற்றது முழு முழு நாடும் சரியான பாதை என்பது, இருப்பினும் சிறிய கட்சிகளின் கூட்டணி இடையே இது முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அவ்வாறு ஏற்பட்டது ஏன்? அதனை மேற்கொண்டவர்களுக்கு அடுத்த செயற்பாடொன்றை எடுக்க முடியாத தற்கான காரணம் என்ன? அதற்கு பிரதான காரணமாக அமைவது சிறிய கட்சி கூட்டணிக்கு எவ்விதமான ஒரு நோக்கமுமல இல்லாமல் இருப்பதாகும். உண்மையில் சிறிய கட்சி கூட்டணியின் நோக்கம் முழு நாடும் சரியான பாதைக்கு கொண்டு செல்வது அல்ல. அது அவ்வாறு இல்லையெனின் இந்த கட்சிகளின் தலைவர்கள் கடந்த காலங்களில் நடந்து கொண்ட விதம் மூலமாக அறியக்கூடியதாக இருந்தது. அதனை சரியாக சொல்லவதாக இருந்தால் இவர்கள் ராஜபக்ஷக்களுக்கு பின்னால் சென்றது எவ்வித ஆடையும் இல்லாமலே. இருப்பினும் இவர்கள் கொக்கரிக்க ஆரம்பித்தது தாங்கள் உணர்வுபூர்வமாக நிறைவேற காரணமாய் அமைந்த 20ஆவது திருத்தத்துக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு பின்னர் ஆகும். சுருக்கமாக சொன்னால் பெசில் பாராளுமன்றம் வருகை தந்ததன் பின்னரே.

இது நடைபெறுவது பெசில் மற்றும் இவர்களுடைய நோக்கங்களிடையே ஒருமித்த தன்னை இன்மையே. பெசிலிற்கு 2024 ஆம் ஆண்டு நாட்டினுடைய ஜனாதிபதிக்கான பயணம் இருக்கின்றது. இவர்களிடம் இருந்தது மஹிந்த பெயர் குறிப்பிடுகின்ற அல்லது நாமலோடு உரிய பயணம். அந்த இரண்டுக்குமிடையிலான முரண்பாடே தற்போது வெளியிலே வந்துள்ளது. இருப்பினும் மஹிந்தவோ, பெசிலோ வேறு ராஜபக்ஷக்களோ அதுகுறித்து வெளியில் கதைக்கவில்லை. அந்த முரண்பாட்டுக்கு இரண்டு பக்கமும் அரசியல் வேட்டை நாய்கள் இருந்தது. அந்த இரு அணிகளிலும் பெசில் அணி முக்கியமானது. அதன் முன்னே விமல், கம்மன்பில,வாசு போன்றோர் மிகவும் கஷ்டப்பட்டதுடன் அதிலிருந்து வெளியேறுவதற்கான ஏற்படுத்திய ஒரு பபர்தான் சிறிய கட்சி கூட்டணி. உண்மையில் அவர்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய உடலில் ஏற்படுகின்ற அழுத்தத்திற்காக வேண்டியே ஒழிய நாடு எதிர்நோக்குகின்ற அழுத்தத்திற்கான ஒன்றல்ல. உண்மையில் இது ஒரு தனிப்பட்ட நோக்கமே ஒழிய பொது நோக்கம் ஒன்று இதில் காணப்படவில்லை என்ற விடயம் தற்போது தெளிவாகியுள்ளது.

அரசாங்கம் விமலையும் கம்மன்பிலவையும் நீக்க எடுத்த செயற்பாடு அவர்கள் இருவருக்கும் மாத்திரமானது அல்ல. கருத்துப்போனது அவர்கள் இருவருக்கும் ஆக இருந்தாலும் அந்த செயற்பாடு பொறிமுறை எடுத்திருப்பது சிறிய கட்சி கூட்டணியின் ஒட்டுமொத்த செயற்பாடுகளுக்கும் எதிராகவே. அதனால் அவர்கள் பொது நோக்கத்தில் இருந்தால் தற்போது அடுத்த செயற்பாடாக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். சரியாக அந்த இடத்தில் தன்னுடைய அமைச்சுப்பொறுப்பிலிருந்து விலகி இருத்தல் வேண்டும். தற்போது புதுமையான ஒரு பைலா அடிக்கின்றார். அதுவும் நோயாளிகளை பணயக்கைதிகளாக வைத்து சுகாதார சேவைப்பிரிவின் வேலைநிறுத்தத்தைப்போன்று.வாசு அமைச்சின் வரப்பிரசாதங்களுக்கு முன்னால் உள்ளவைகளை அரிவாளாலும் சுத்தியலாலும் அவற்றை மறைக்க முடியாது. உண்மையில் வாசு எனபவர் கருத்தியல் ரீதியாக உறுதியானவரன்று. அதாவது பச்சை திரவம் போன்ற ஒரு நபராவார். உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றது வாசு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஒரு நாள் அவர் கூறிய விடயம் கோட்டாபய என்பவர் மிலிட்டரி மனதுடையவர் என்று .அந்த இரும்பு செருப்புக்கு நாட்டை கீழ்நிலைப்படுத்த முடியாது என்று.

அவ்வாறு குறிப்பிட்ட வாசுக்கு ஒரு கிழமைகழிந்த பின்னர் கோட்டாபய சிறந்த ஜனாதிபதி வேட்பாளர் ஆனார். அதனால் ரட்டே ரால நினைப்பது அடுத்த பக்கத்தில் தற்போது வாசுக்கு சொட் வைத்துள்ளார்கள் என்று . வாசு பெசில் தான் அடுத்த ஜனாதிபதி அபேட்சகருக்கு பொருத்தமானவர் என்று சொன்னால் அது தொடர்பில் ரட்டே ரால புதுமை அடைவதில்லை .

அடுத்ததாக தேசிய சுதந்திர முன்னணியில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இதுவரைக்கும் அவருடைய பதவி விலகல் கடிதத்தை வழங்கி இருத்தல் வேண்டும் .ஆனால் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி அவர் சுகயீனமாக இருக்கின்றாராம். சிறிய கட்சி கூட்டணி அல்ல குறைந்தபட்சம் தேசிய சுதந்திர முன்னணியின் செயற்பாடுகள் கூட ஒரு பக்கத்தில் செல்ல முடியாது உள்ளது. ஜயந்த பதவி விலகாமல் இருப்பது உண்மையில் அரசியல் கோழைத்தனமாகும். ரட்டே ரால நினைப்பது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விமலுக்காக கழுத்தை கொடுத்துள்ளது என்று . உண்மையில் அவர்களுக்கு ஒரு தர்க்கம் இருக்கலாம். நாங்கள் வந்தது முன்மொழிவுக்காக முன்னிற்க. இருப்பினும் குறித்த எல்லையை மீறி விமலும் கம்மன்பிலவும் பெசிலுக்கு செய்தது தவறு என்று . அவ்விருவரும் அரசாங்கத்தினுடைய கெபினட் அமைச்சர்கள் என்பதால் அவ்வாறு சொல்லலாம்.

விமல் மற்றும் கம்மன்பில எப்போதும் அவ்வாறான வேலைகளை செய்கின்ற இருவராவர். தாங்களால் ஏற்க முடியாதவைகளுக்கு எல்லை மீறி தம் கருத்துக்களை சொல்வார்கள். அதிலிருந்து அவர்கள் தங்களது எதிரிக்கு சொல்வது இந்த கூட்டம் அனைவரும் எங்களுடன் தான் இருக்கின்றார்கள் என்று. அதனால் மேடையில் இருக்கக்கூடிய அந்த நபர்கள் தர்மசங்கடத்திற்கு உட்படுவர். அன்று இரண்டாம் திகதியும் விமல் அதனை செய்தார். நேற்றைய கலந்துரையாடலின்போது அதனை செய்தார். தற்போது அவருக்கு ஒரு வினாடியேனும் இந்த அரசாங்கத்தில் இருக்க முடியாது. ஜனாதிபதி தனது சகோதரரரை வைத்துக்கொள்ள அவர்களை நீக்கிவிட்டார். உண்மையில் விமல் குறிப்பிட்டது இந்த ஜனாதிபதி பெசில் நடிக்கவைக்கும் பொம்மை என்று. அந்த கதை உண்மை ரட்டே ரால அதனை விமல் குறிப்பிடுவதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் தற்போது விமலிற்கு அரசாங்கத்தில் இருக்க முடியாது. குறைந்தபட்சம் தேசிய சுதந்திர முன்னணி, கம்மன்பில சுயாதீனமாக இருத்தல் வேண்டும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது குறித்த போராட்டத்தில் விலகியது போன்று தோன்றுகின்றது உண்மையில் இந்தப் பிரச்சனையினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உள்ளே உள்ளக முரண்பாடு விரிசல் அடைவது திண்ணமானது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரை தலைமை ஆசனத்தில் வைத்துக்கொண்டே மேற்கொண்ட போராட்டமே இது.இருப்பினும் அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது என்ற நிலையில் நிலையில் இருந்து கொண்டு வந்த போராட்டமாக இதனை நினைக்க முடியாது.சில சந்தர்ப்பத்தில் விமலும் கம்மன்பிலவும் அவ்வாறு நெளியமாட்டார்கள் என்று நினைத்திருக்கக் கூடும். இருப்பினும் அவர்களோடு ஒன்றாக போராட்டத்தில் இருந்த இருவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒன்றாக நின்று தம்முடைய எதிர்ப்பை தெரிவிக்கும் பொறுப்பை செய்தல் வேண்டும்.

இருப்பினும் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சுப் பொறுப்பை விடுவாரா? மஹிந்த அமரவீர அமைச்சுப் பொறுப்பை கைவிடுவாரா? துமிந்த திசாநாயக்க இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை கைவிடுவாரா? அதேபோன்று ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பொறுப்பை கைவிடுவாரா? பைத்தியம் தான்.இவ்வளவு காலமும் தயாசிரி ஜயசேகர கூறியது மத்திய குழு கூட்டத்தில் எடுக்கும் தீர்மானத்திற்கேற்ப அரசாங்கத்திலிருந்து விலக முடியும் என்று. அப்படியாயின் தற்போது ஒரு பிரச்சினை இருக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிறிய கட்சி கூட்டணி கூட்டத்திற்கு சென்றது. மத்திய குழுவின் தீர்மானத்தின் அடிப்படையிலா? இல்லை என்றால் ஒரு ஜொலிக்காக சென்றார்களா?

ரட்டே ராலவிற்கு தெரிந்த அரசியல் அடிப்படையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஒரு பிளவு இருக்க வேண்டும். அது அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்கின்ற ஒரு குழுவும் வெளியேற முடியாமல் இருக்க வேண்டும் என்ற ஒரு குழுவும். தற்போது இந்த சந்தர்ப்பத்தில் எந்த ஒரு அணியும் வலுவானதாக இருந்தபோதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுதியான தீர்மானத்துக்கு சென்றால் அக்கட்சியின் ஒரு குழு அரசாங்கத்தில் கட்டாயமாக இருக்கும். இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி மீண்டும் இரண்டாக உடையக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்.

அதே போன்று ஏனையகட்சியினுடைய ஆதரவாளர்கள் சிலரையும் அரசாங்கம் கழற்றி எடுக்கும். அதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சினை இந்த பிரச்சினையில் ஒழிந்திருப்பதே. அடுத்ததாக ஒழியும்போது கட்சியினுடைய ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வு ஏற்படும்.ரட்டே ரால இறுதியாக குறிப்பிட்ட ஆக்கத்தில் இவர்களிடம் இருக்கின்ற அரசியல் நோக்கங்களில் இறுதியானதாக குறிப்பிட்டதனை நேற்று வாசு நிரூபித்திருக்கிறார்.வாசு குறிப்பிட்டது அவர்கள் முயற்சி செய்வது அரசாங்கத்தில் வெளியேறுகின்றவர்களுக்கு தங்குவதற்கு வேறான தங்குமிடமொன்றை ஏற்படுத்துவதற்கு என்று.இதனால் இவர்களது அரசியல் நோக்கம் தொடர்பில் ரட்டே ரால குறிப்பிட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

தற்போது ரட்டே ரால குறிப்பிடுவது வேறு நோக்கங்களை தலையில் வைத்துக் கொண்டு வந்த சிறிய கட்சி கூட்டணிக்கு ஒன்றுபட்டு செயற்பட முடியாமல் போய்விட்டது. இல்லையென்றால் பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேரை வைத்துக்கொண்டு அவர்கள் அழுதுகொண்டு இருக்கவேண்டுமா? இந்த அரசாங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் 30 பேர் அதில் இருந்து கழன்று வந்தால் அந்தப் பயணம் 115- 120க்கு கீழே இறங்க வேண்டிய நிலை ஏற்படும். உண்மையில் அரசாங்கத்தின் உள்ளே வெறுப்படைந்து இருக்கக்கூடிய மொட்டு கட்சிக்காரர்கள் பலர் இருக்கின்றார்கள். தேவையாக இருந்தால் அரசாங்கத்தோடு அவர்கள் பேரம் பேசவும் முடியும்.

இருப்பினும் சிறிய கட்சி கூட்டணி யாருக்கும் அவ்வாறான விடயங்கள் தலைக்கு வராது. அவர்கள் இந்த இரண்டு வருடங்களுக்கு உள்ளே செய்தது, தங்களை தாக்க வேண்டிய அவசியமான ஆயுதத்தை ராஜபக்சக்கள் உடைய கைகளுக்கு வழங்கியதுதான். சும்மா அல்ல மூன்றில் 2 அதிகாரத்துடன் வழங்கப்பட்டது. அதனால் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை தெரிந்து கொள்ள முடியாமல் உள்ள அரசியல் கோமாளிகளாக அந்த சிறிய கட்சி கூட்டணிகள் இருக்கின்றது. அந்த உறுப்பினர்கள் 30 பேருக்கும் இருப்பது 30 நோக்கு. அவை அனைத்தும் தனிப்பட்ட நோக்கங்கள் ஆகும். அவையாவும் தனிப்பட்ட நோக்கங்களாகும். அதனால் அதனை முகாமை செய்வது ராஜபக்சக்களுக்கு பெரிய விடயமன்று. எங்களுக்கு முன்னர் சிறிய கட்சி கூட்டணியின் பேரவலத்தை பார்க்ககூடியதாக அமையும்.

அப்படியாயின் போய் வருகின்றேன்.
கடவுள் துணை, வெற்றி கிட்டட்டும்

இப்படிக்கு
ரட்டே ரால

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி